தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் 5 வருடத்தில் Rs. 2,34,664 வட்டி பெறலாம்.
பணக்கஷ்டம் என்பது எல்லோருக்கும் இருக்கும் நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைத்தால் ஏதோ ஒரு நேரத்தில் உதவும் அதனால் சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து கொஞ்சமாவது சேமித்து வையுங்கள் எந்த திட்டத்தில் சேமிப்பது எதில் சேமித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்.
தபால் அலுவலகம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குவதால் எந்த மாதிரியான பயமும் இல்லாமல் இணையலாம்.
இது தபால் அலுவலக திட்டத்தில் சேருவதைப் பற்றிய திட்டம் தபால் சேமிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது முழுமையாக நாம் தெரிந்து வைப்பது இல்லை
இதற்கு என்ன தகுதி வேண்டும்
18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
டெபாசிட் தொகை இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்
இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு முறை டெபாசிட் செய்தால் போதுமானது. அதாவது கணக்கை திறக்கும் போது மட்டும் தொகையை செலுத்தினால் போதும்.
இந்தத் திட்டத்தில் வட்டி தொகையாக 7.7% வட்டி வழங்கப்படுகிறது
நீங்கள் இந்த திட்டத்தில் கணக்கை திறக்கும்போது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறதோ. அந்த வட்டி தொகையானது ஐந்து வருடத்திற்கும் குறையாமல் அதே வட்டி தான் வழங்குவார்கள்.
மேலும் இந்த திட்டத்தை பயன்படுத்தி லோன் பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்த திட்டத்திற்கான டெபாசிட் காலம் ஐந்து வருடம்கொடுக்கப்படுகிறது .
மேலும் விபரங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலைய அதிகாரியை தொடர்புகொள்ளவும்.
| செலுத்தும் தொகை | வட்டி | கூடுதல் தொகை |
|---|---|---|
| 1,000 | 449 | 1,449 |
| 3,000 | 1,408 | 4,408 |
| 5,000 | 2,347 | 7,347 |
| 10,000 | 4,693 | 14,693 |
| 50,000 | 22,452 | 72,452 |
| 1,00,000 | 46,933 | 1,46,933 |
| 3,00,000 | 40,798 | 3,40,798 |
| 5,00,000 | 2,34,664 | 7,34,664 |
| 10,00,000 | 4,69,328 | 14,69,328 |