210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்.
Atal Pension Yojana Scheme Details in Tamil
அட்டல் பென்ஷன் யோஜனா ஸ்கீம் டீடைல் இன் தமிழ்நாடு என்பதை பற்றி இந்த பதிவில் சொல்லப்போறேன் வாங்க வீடியோக்குள்ள போகலாம்
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அன்றைய நாள் செலவை கழித்துவிட்டு மீதம் இருக்கும் தொகையை கையிலோ அல்லது வங்கியிலோ சேமித்து வைக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி சேர்க்கும் போது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதனால் பணத்தை ஏதோ ஒரு திட்டத்தில் சேமித்து வைக்க வேண்டும் அதுவும் வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களில் சேமித்து வைத்தால் பிற்காலத்தில் நமக்கு உதவும். அப்படி ஒரு திட்டம் நம் அஞ்சல் அலுவலகத்தில் இருக்கிறது.
வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் 5 வருடத்தில் Rs. 2,34,664 வட்டி பெறலாம்.
தகுதி:
இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பயனடையலாம்.
நீங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்த வயதில் இருந்து 60 வயது வரைக்கும் டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில் எவ்வளவு பென்ஷன் மாதம் உங்களுக்கு தேவைப்படுமோ அந்த பென்ஷன் அளவு நீங்கள் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும்.
அதை தேர்வு செய்தீர்கள் என்றால் அதற்கேற்ப டெபாசிட் தொகை மாறுடுபடும். கணவன் இந்த திட்டத்தில் சேர்ந்து அவருடைய வாழ்நாள் முடிந்த பிறகு அவருடைய மனைவிக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும்.
கணவன் மனைவி இருவருமே இறந்த பிறகு நாமினி என்று ஒருவர் பெயரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் என்றால் அவர்களுக்கு இந்தத் தொகையை வழங்குவார்கள்.
எவ்வளவு பென்ஷனை செலக்ட் செய்தால் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்.
| பென்ஷன் தொகை | மாதாந்திர தொகை | பென்ஷன் தொகை | நாமினி தொகை |
|---|---|---|---|
| 1,000 | 42 | 1,000 | 1,70,000 |
| 2,000 | 84 | 2,000 | 3,40,000 |
| 3,000 | 126 | 3,000 | 5,10,000 |
| 4,000 | 168 | 4,000 | 6,80,000 |
| 5,000 | 210 | 5,000 | 8,50,000 |