இந்த மூலிகையை பற்றி தெரிந்தால் விடவேமாடீர்கள்.
சித்திரை பாலாடை என்று சொல்லக்கூடிய அம்மான் பச்சரிசி என்கிற ஒரு மூலிகையை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். இந்த அம்மான் பச்சரிசி மூலிகை செடியை பெரும்பாலும் வயல் வரப்புகளிலும் ரோட்டோரங்களிலும் நம்மால் பார்க்க முடியும்.
எளிமையாக கிடைக்கக்கூடிய மூலிகை அம்மான் பச்சரிசி. இந்த அம்மான் பச்சரிசி மூலிகைக்கு சித்திரைப்பாலாடை, பச்சரிசி பாலாடை, எம்பெருமான் பச்சரிசி, வெள்ளி புஷ்பம், பாலப்போடு என்றும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார் போல் பெயர் வைத்து அழைப்பார்கள்.
இந்த மூலிகையுடைய மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இந்த மூலிகை பற்றின ஒரு சுவாரசியமான தகவலை தெரிந்து கொண்டு பிறகு இந்த மூலிகை பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்றாக செழிப்பாக வளர்ந்து இருக்கக்கூடிய அம்மன் பச்சரிசி மூலிகையின் தண்டு பகுதிகளில் கிள்ளி எடுத்தால் தண்டு பகுதிகளில் இருந்து வெள்ளை வண்ணத்தில் பால் வரும்.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
அந்த பாலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த பாலில் ஒரு மேஜிக் இருக்கிறது, ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அந்த வெள்ளை காகிதத்தில் இந்த பாலை பயன்படுத்தி ஏதாவது ஒரு எழுத்தை அல்லது ஏதாவது ஒரு ஓவியத்தை வரைந்து கொள்ளுங்கள்.
அது உங்கள் கண்களுக்கு நன்றாக தெரியாது. இப்பொழுது இந்த காகிதத்தை நெருப்பு மூலமாக எரிக்க ஆரம்பியுங்கள். அது எரிந்து அம்மான் பச்சரிசி பால் மூலமாக எழுதின இடத்திற்க்கு வரும்போது நீங்கள் என்ன வடிவத்தில் அந்த எழுத்துகளை எழுதியிருந்தீர்களோ அந்த இடத்தில் டார்க் அடித்தது போல் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். நீங்கள் காகிதத்தில் எழுதியபொழுது உங்களுக்கு லைட்டாக தான் தெரியும். ஆனால் தீ மூலமாக அது நன்றாக நெருப்பில் எரியும் போது உங்களுக்கு நன்றாக அடர்த்தியாக கருப்பு வண்ணத்தில் தெரியும்.
அம்மான் பச்சரிசியினுடைய முக்கியமான மருத்துவ பயன்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மூலிகையை எப்படி பயன்படுத்துவது என்றால் அந்த மூலிகையை நீங்கள் நன்றாக கழுவிட்டு அதை பச்சையாக அப்படியே சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் போதும். இதனுடைய பலன்கள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் மட்டும் நீங்கள் இந்த மூலிகையை அரைத்து அதை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மலச்சிக்கல்
இந்த அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சை பழம் அளவில் உருண்டை போல எடுத்து அதனுடன் நாட்டு மாட்டு பாலை சேர்த்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
இந்த இலையை நன்றாக நெய் விட்டு வதக்கி அதனுடன் பாசிப்பயறுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை தீரும்.இதை அப்படியே பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடித்தாலும் அல்சர் பிரச்சினை தாராளமாக குணமாகும்.
இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்
அல்சர்
அம்மான் பச்சரிசி மூலிகையின் தண்டு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வெள்ளை வண்ணத்தில் பால் வரும். அந்த வெள்ளை வண்ணத்தில் இருக்கின்ற பால் நிறைய வியாதிகளை குணமாக்கும். அதில் முக்கியமாக வாயில் உதட்டில் இருக்கக்கூடிய சிறு கொப்பளங்கள் அல்லது சிறிய சிறிய அளவில் இருக்கின்ற புண்களில் இந்த பாலை அதன் மேல் வைத்து வந்தால் காணாமல் போகும்.
மறு பிரச்சினை இருக்கிறவர்கள் இந்த பாலை அந்த மறுவின் மேல் வைத்து வந்தால் மறு உதிர்ந்து விடும். மறு உதிர வில்லை என்றால் இந்த இலையை அதன் தண்டு பகுதி மற்றும் பூவுடன் சேர்த்து அரைத்து இரவு நேரத்தில் அந்த மறுப்பகுதியில் வைத்து மறுநாள் காலையில் அந்த மூலிகை மருந்தை எடுக்கும் போது மறு உதிரும்.
நகசுத்தி
விரல்களில் ஏற்படும் நகசுத்திக்கு இந்த மூலிகையை தண்டு பகுதியோடு சேர்த்து அரைத்து அதன் மேல் வைத்து வந்தால் சீக்கிரமாக குணமாகும். அம்மான் பச்சரிசி மூலிகையை அறைத்து புண் இருக்கும் இடத்தில் வைக்கும் போது ஒரு சின்ன துணியை எடுத்து கட்டி விடுவது நல்லது. அந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் தான் மூலிகை நன்றாக வேலை செய்யும்.
முகத்தில் அதிக அளவில் இருக்கும் பருக்களை அகற்ற இந்த மூலிகையை பயன்படுதஅம்மான் பச்சரிசி மூலிகையுடைய வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய அந்த பாலையும் வந்து நீங்க வைக்கலாம். அதனாலும் சீக்கிரமாக குணமாகும்.